Twitter செயலியில் சூப்பர் அப்டேட் அறிமுகம் – பயனர்கள் மகிழ்ச்சி!
மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு செய்தி பகிர்வு சமூக வலைதளமான ட்விட்டரில் தற்போது புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ட்விட்டர் பதிவு:
பிரபலங்கள் பலர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான ட்விட்டர் பல தரப்பு மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சினிமா பிரபலங்கள் முதல் பல அரசியல் தலைவர்கள் மக்களிடம் தகவல்களை சொல்ல நல்ல பாலமாக இந்த செயலி இருக்கிறது. இந்த செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஒரு பயனரை பின் தொடர்ந்து வரும் ஃபாலோயர்களுக்கு தெரியாமலே அவர்களை நீக்கும் புதிய வசதி அறிமுகமாகி உள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!
இதனை ‘Soft Block’ என ட்விட்டர் இதனை சொல்லியுள்ளது. ஒரு ஃபாலோயரை சாப்ட் பிளாக் செய்ய ப்ரொபைல் > ஃபாலோயர்ஸ் > ஃபாலோயரின் பெயருக்கு பக்கத்தில் உள்ள மூன்று டாட்களை க்ளிக் செய்யவும் > அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனில் ‘Remove this Follower’ தேர்வு செய்தால் ஃபாலோயரை சாப்ட் பிளாக் செய்து விடலாம். இந்த அம்சம் வழங்கும் முன், பிளாக் செய்யப்பட்ட நபர் உங்களின் ப்ரோபைலை பார்க்க முற்பட்டால் நீங்கள் அவரை பிளாக் செய்துள்ளீர்கள் என ட்விட்டர் தெரிவிக்கும்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ஆனால் புதிய அம்சம் கொண்டு பாலோவரை நீக்கினால், யார் உங்களின் ட்வீட்களை பார்க்கின்றனர் என்பதை நினைத்து பாதுகாப்பாக உணரலாம்.புதிய அம்சத்தை ட்விட்டரில் குறிப்பிட்ட நபரின் ப்ரோபைலில் மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை க்ளிக் செய்து ரிமூவ் திஸ் பாலோவர் (remove this follower) எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். புதிய அம்சம் கொண்டு ஒருவரை பிளாக் செய்யாமல், அவரிடம் இருந்து ட்விட்டரில் விலகி இருக்க முடியும். மேலும் சில அறிவுறுத்தல் ஆப்ஷனை கொண்டு வரவும் ட்விட்டர் முடிவு செய்துள்ளதாம். தற்போது அதன் சோதனையை நடத்து வருகிறதாம் ட்விட்டர். இதன் மூலம் பயனர்கள் தேவையற்ற உரையாடல்களை (Conversations) தவிர்க்க முடியும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.