SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கணக்கு முடக்கம்? வெளியான உண்மை!
இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி இருப்பதாக போலி தகவல் ஒன்று குறுஞ்செய்தி வாயிலாக பரவி வருகிறது. இது குறித்து பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ நிறுவனம் அதிகாரப்பூர்வ பதிவை வெளியிட்டுள்ளது.
ஸ்டேட் வங்கி:
இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் வங்கி சேவையை வழங்கியது. வங்கிகளின் அதிகாரபூர்வ இணையப்பக்கங்கள் மூலம் பண பரிமாற்றம் நடைபெற்றது. இந்த சூழலை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்களை போல தொலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கி பயனர்களிடம் இருந்து வங்கி கணக்கு எண், ஏடிஎம் பின் நம்பர் போன்றவர்களை சேகரித்து அதை வைத்து எளிதாக பணத்தினை கையாடல் செய்கின்றனர்.
Twitter செயலியில் சூப்பர் அப்டேட் அறிமுகம் – பயனர்கள் மகிழ்ச்சி!
மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்கள் வங்கி கணக்கு முடங்கி விட்டது உங்கள் கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனை நம்பி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் அனைத்து தனிப்பட்ட விவரங்களை கூறுகின்றனர். மேலும் மோசடி கும்பல் மொபைல் எண்ணிற்கு இது குறித்தும் குறுஞ்செய்தியும் அனுப்புகின்றனர். இது போல பாரத ஸ்டேட் வங்கி, ஆவணங்களை சரியாக இணைக்காத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதாக கூறி எஸ்.எம்.எஸ்கள் பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!
இணைய வங்கி மூலம் ஆவணங்களை இணைக்க வலியுறுத்துகின்றனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது இது போன்ற அறிவிப்பை ஸ்டேட் வங்கி வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ இந்த போலி தகவல் குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதிலிருந்து ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு முடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.