தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூடுதல் தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இதற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. அதன் பிறகு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மக்கள் அரசின் கடைபிடிக்காத காரணத்தால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலையிலேயே இருந்தது.
கொரோனா தடுப்பூசி செலுத்த WhatsApp இல் முன்பதிவு – பயனர்கள் கவனத்திற்கு!
அதன் பிறகு மெல்ல மெல்ல கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியது. இதனால் படிப்படியாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதனால் கடந்த மாதம் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் கூட்டம் கூடி தொற்று பாதிப்பை அதிகரிக்க கூடும் என்று கருதி, தமிழக அரசு அக்டோபர் 31ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளை நீட்டித்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தற்போது கொரோனா தினசரி பாதிப்பு தமிழகத்தில் சீராக குறைந்து வருகிறது. நேற்று மட்டும் 1,289 பேர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில், வெள்ளி, சனி, ஞாயற்றுக்கிழமைகளில் கோயில்களை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.