தமிழகத்தில் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அறிவுறுத்தல்!
தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையில் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் பணிக் காலத்தில் இறந்த அரசுப் பணியாளா்களின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள இறுதி தொகையை முடித்து உடனடியாக வழங்க வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி
தமிழ்கத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அவர்களின் பொது வருங்கால வைப்பு நிதி திட்ட கணக்கில் சேமிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் பணிக்காலம் முடிவடைந்த பிறகு இந்த திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகையுடன் அரசு சார்பாக குறிப்பிட்ட தொகையும் சேர்த்து ஓய்வூதியமாக அவர்களின் முதிர்வு காலத்தில் வழங்கப்படுகிறது. இது அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த திட்டத்தில் சேமிக்கப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 7.10% வட்டி வழங்கப்படுகிறது.
TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் 2022 – சம்பளம், விண்ணப்ப முறை & முழு விபரம் இதோ!
இந்த நிலையில் தொடக்கக் கல்வித் துறையில் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் பணிக் காலத்தில் இறந்த அரசுப் பணியாளா்களின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள இறுதி தொகையை கணக்கீடு செய்து உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மேலும் இதில் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள், அவர்களின் இறுதி தொகையை பெற விரும்பினால் ஓய்வு பெறுவதற்கு 4 மாதங்களுக்கு முன்பாக அவரின் விண்ணப்பத்தை மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
இதையடுத்து ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2.5.2022 முதல் 1.6.2022 வரை ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களின் பொது வருங்கால வைப்பு நிதியில் சந்தா தொகை விடுபட்டுள்ளது. அதனால் இதனை சரி செய்து மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் குறிப்பாக அனைத்து மாவட்டங்களில் மே 2ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியா்களின் பொது வருங்கால வைப்பு நிதியில் விடுபட்டுள்ள சந்தா தொகையினை சரி செய்து மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.