தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஊதிய உயர்வு அளிப்பது போல் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிப்பது குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.
ரேஷன் கடை ஊழியர்கள்:
சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில், நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கூறியதாவது, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல், தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வும், ஊதியமும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா பரவல் – சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை!
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதாவது, கொரோனா காலகட்டத்திலும் நாங்கள் ஓய்வில்லாமல் உழைத்தோம் எனவும், இக்கட்டான சூழ்நிலையிலும் பொது மக்கள் நலனுக்காக பணி புரிந்தோம் என்றும் தெரிவித்துள்ளனர். இப்படி பணி ஆற்றிய எங்களுக்கு அரசு அகவிலைப்படி உயர்வும், ஊதியமும் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஜூன் 7ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது.
அதேபோல் தொடர்ந்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் விவரங்களை சேகரித்து நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி , வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பதிலாக மற்றொரு பணியாளர்களை நியமித்து ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது போல் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி கண்டிப்பாக உயர்த்தப்படும் என, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கிறார். மேலும், நியாய விலை கடை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, இன்னும் ஒரு வாரத்திற்குள் இதற்கான நல்ல முடிவு எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.