IT நிறுவன ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முடிவடையும் Work From Home!
IT நிறுவன ஊழியர்கள் தற்போது வரைக்கும் வீட்டில் இருந்தபடியே தான் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், வாரத்தில் சில நாட்களாவது கட்டாயமாக ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Work From Home:
கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்தே ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் WFH முறை மாற்றப்பட்டது. கொரோனா பரவல் குறைந்த பிறகும் கூட மூத்த ஊழியர்கள் மட்டுமே நேரடியாக அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், மேலும் சில ஊழியர்களை நிறுவனங்கள் அலுவலகங்களுக்கு அழைத்து வருகின்றனர். அதாவது, ஆர்பிஜி குழுமம், டிசிக்கள், மஹிந்திரா குழுமம் ஆகிய நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு சார்பில் ஆட்டோ முன்பதிவிற்கான செயலி? வலுக்கும் கோரிக்கை!
அதாவது, ஆர்பிஜி குழுமம் சில வாரங்களுக்கு முன்பு ஊழியர்கள் வாரத்தில் சில நாட்களாவது அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். மேலும், பாதி ஊழியர்களை மட்டும் வீட்டிலிருந்தே WFH முறையில் வேலை செய்ய அனுமதிக்கிறது. மேலும், டாடா கன்சல்டன்சி நிறுவனம் தற்போது 20% ஊழியர்களை புதிதாக பணியமர்த்தியுள்ளனர். இதனிடையே, டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் விருப்பத்திற்காக 25 × 25 அணுகுமுறையை பின்பற்றி வந்தது. தற்போது 25 × 25 திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என TCS நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ஆர்பிஜி குழுமத்தின் ஜென்சார் டெக்னாலஜிஸ் நிறுவனமும் ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது 10-20 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். மேலும், ஜென்சார் டெக்னாலஜிஸ் நிறுவனம் தற்போது ஹைபிரிட் வேலை மாதிரியை பின்பற்றி வருகிறது. இந்நிலையில், வாரத்தில் சில நாட்கள் மட்டும் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்க்கும் படியான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதே போல டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திலும் 45%ஊழியர்கள் வாரத்திற்கு இரண்டு முறை அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்