தமிழகத்தில் அரசு சார்பில் ஆட்டோ முன்பதிவிற்கான செயலி? வலுக்கும் கோரிக்கை!
கேரள மாநிலத்தில் ஆட்டோ, ரிக்ஸா உள்ளிட்டவை புக் செய்ய செயலி ஒன்றை அம்மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. இதே போல தமிழகத்திலும் செயலி அரசால் உருவாக்கப்பட வேண்டுமென ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆட்டோ முன்பதிவு செயலி
கேரள மாநிலத்தில் ஆட்டோ, ரிக்ஸா உள்ளிட்டவை ஆன்லைன் முறையில் புக் செய்ய “கேரளா சவாரி” என்ற செயலியை அரசு உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தும் ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் தங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து 8% மட்டுமே அரசுக்கு செலுத்தினால் போதும் என்றும் கேரளா அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த கமிஷன் மற்ற தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் கமிஷனை விட குறைவாகவும் உள்ளது. இது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக அரசு சட்ட கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு – நீதிமன்றத்தின் பரிந்துரை!
அதனால் தமிழகத்திலும் இது போன்ற செயலியை உருவாக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் கூறியிருப்பதாவது, இந்தியாவில் கடந்த 8 வருடங்களாக டீசல், பெட்ரோல், சிலிண்டர் எரிவாயு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி கொண்டிருக்கிறது. அத்துடன் கொரோனா கால கட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சலுகைகளோ, மானியமோ இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த 8 ஆண்டுகளாக ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். அதனால் மீட்டர் கட்டணத்தை விலைவாசிக்கேற்ப உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து மீட்டர் கட்டணம் விலைவாசிக்கு ஏற்றவாறு சிறந்த தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய வகையில் டிஜிட்டல் மீட்டரை அரசு இலவசமாக வழங்க வேண்டும். இதனை தொடர்ந்து மீட்டர் கட்டணம் ஒரு கி.மீ.க்கு ரூ.50 என்றும் அடுத்தடுத்த கி.மீ.க்கு ரூ.25 என்றும் வசூலிக்கப்பட வேண்டும். கேரளா அரசு உருவாக்கியது போன்று தமிழக அரசும் ஆட்டோ முன்பதிவு செயலியை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்