தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் எந்த விதமான காரணங்களும் கூறாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் கடந்த 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கிராமப்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. அதன்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்றது. பிறகு வாக்காளர் பட்டியலில் புதிதாக 10.17 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. 2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் 8700 காலிப்பணியிடங்கள் – இன்றே கடைசி நாள்!
490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜனவரி 28ம் தேதி தொடங்கி பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 5ம் தேதி ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்த படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
IPL ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட் – இறுதி போட்டியிலிருந்து விலகும் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள்!
அதனை தொடர்ந்து தற்போது தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய, ஆசிரியர்களின் பட்டியலை, பள்ளி கல்வி அதிகாரிகள் தயாரித்துள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் சில ஆசிரியர்கள் விடுப்பு கேட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமலும் எந்த விதமான காரணங்களும் கூறாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.