IPL ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட் – இறுதி போட்டியிலிருந்து விலகும் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள்!

0
IPL ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட் - இறுதி போட்டியிலிருந்து விலகும் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள்!
IPL ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட் - இறுதி போட்டியிலிருந்து விலகும் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள்!
IPL ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட் – இறுதி போட்டியிலிருந்து விலகும் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள்!

2022 ஆம் ஆண்டுக்கான IPL கிரிக்கெட் போட்டிகள் வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இறுதி போட்டியானது ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

IPL 2022:

IPL ஏலம் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து வீரர்களாகிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ரூட், ஸ்டார்க் ஆகியோர் இந்த ஆண்டுக்கான IPL மெகா ஏலத்தில் விருப்பம் தெரிவிக்காததால் அவர்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக BCCI தெரிவித்தது . இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முக்கிய வீரர்களாக திகழ்ந்து வைத்த ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் அணியில் இடம் பெறாமல் உள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது IPL இறுதிப்போட்டியில் இருந்து இறுதிசுற்றுக்கு முன்னேறிய அணிகளில் இடம்பெறுள்ள இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – பொதுமக்கள் கோரிக்கை!

ஜூன் முதல் வாரத்தில் உலக சாம்பியனான நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் 2022 இறுதி போட்டியில் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் நட்சத்திரங்கள் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் சீசனின் அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) டெஸ்ட் வீரர்கள் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் 2022 இறுதி போட்டியில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆதார் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – PVC அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஊடக அறிக்கைகளின்படி, ஐபிஎல் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி ஏப்ரல் மற்றும் மே முழுவதும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லார்ட்ஸில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் விலகுவது குறித்து ஐபிஎல் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் 22 இங்கிலாந்து வீரர்கள் தங்களை பதிவு செய்துள்ளனர். ஜானி பேர்ஸ்டோவ், மார்க் வூட், டேவிட் மலான், ஒல்லி போப், கிரேக் ஓவர்டன், சாம் பில்லிங்ஸ் மற்றும் டான் லாரன்ஸ் போன்றவர்கள் பட்டியலில் உள்ளனர். எனவே இறுதிசுற்றுக்கு முன்னேறிய அணிகளில் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் வெளியேற வாய்ப்புள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!