தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த கற்பித்தல் பணிகளை சிறப்பாக நடத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
முக்கிய எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, கற்றல், கற்பித்தல் உள்ளிட்டவற்றை மேம்படுத்த பல்வேறு செயல் திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ஆய்வு கூட்டங்களை கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வு கூட்டங்களை மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகின்றனர்.
SEBI நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க ஜன.24 கடைசி நாள்!
இந்த கூட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு பள்ளிகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு ஆசிரியர்கள் முறையாக பாடக் குறிப்பேடு எழுதாமல் இருந்தது கண்டறியப்பட்டது. அத்துடன் சில பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த கூட தெரியவில்லை. மேலும் ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பாடம் நடத்துகின்றனர். இதனை மாற்றி ஆசிரியர்களை ஆங்கிலத்தில் பாடங்களை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு – சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள்!
மேலும் பாடக் குறிப்பேடு முறையாக எழுதாத ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் கொரோனா கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் போது ஆசிரியர்கள் பாடங்களை சிறப்பாக நடத்துகிறார்களா? என்று பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வளாகங்களை சுற்றி வந்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.