தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
தமிழகத்தில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கான அறிவிக்கப்பட்ட கடைசி நாள் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதில் மத்திய மாநில அரசுகள் தெளிவாக இருக்கின்றன. இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் – கடனுக்கான வட்டி விகிதம் 4.40% ஆக உயர்வு!
அதனை தொடர்ந்து, பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது. இதன் மூலம், நாட்டின் உள்ள எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் ரேஷன் கார்டுகளை பெற முடியும். முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது. தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ளது. நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க வில்லை என்றால், வரும் ஜூன் 30 2022க்குள் அதை செய்து முடிக்கவும்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இணைக்க தேவையான ஆவணங்கள், ஒரிஜினல் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ். ஆன்லைனில் இந்த ஆவணங்களை கொண்டு uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் start now என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதில், முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும். பின்பு ration card benefit என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட போன் நம்பரில் வரும் OTP ஐ நிரப்பிய பிறகு, தங்களின் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள். அதன் பின்னர் ஆதார் கார்டு சரிபார்க்கப்பட்டது என்று SMS மூலமாக உங்களுடைய மொபைல் நம்பருக்கு வந்து விடும். அதுமட்டுமில்லாமல் இந்த செயலை நேரடியாக ரேஷன் கார்டு மையத்திலும் சென்று இணைக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் உடனடியாக இந்த வேலையை செய்து முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.