தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசின் அதிரடி அறிவிப்பு!
ஒரு இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக குடும்ப அட்டை உள்ளன. இந்த குடும்ப அட்டை மூலம் ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்று பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உணவுப்பொருள் வழங்கல் துறை ரேஷன் கடைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதிரடி அறிவிப்பு:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் வாயிலாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை.
தமிழகத்தில் நாளை (பிப்.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதன் காரணமாக அவர்கள் பொருள்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இது குறித்து குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. எனவே விரல்ரேகை சரிபார்க்கும் நடைமுறையில் பிப்ரவரி 22 முதல் இடையூறுகள் ஏற்படுகிறது, நமது மாநிலத்தில் மட்டுமன்றி இதர மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ளன. இது குறித்து நிறுவனங்களின் உயர் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுச் சரி செய்யப் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
எனவே பரவலாக தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத நேரங்களில் உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன் தவறாது உணவு பொருட்களை விநியோகம் செய்யப்பட வேண்டும். இதனை தொடர்ந்து அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய உணவு பொருட்கள் தரமாக விநியோகம் செய்யப்பட்டு உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டுமெனவும் நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன என்று குறிப்பிடபப்ட்டு உள்ளது.