TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வுகள் சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
TN TRB தேர்வுகள்:
தமிழக ஆசிரியர்தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை சமீபத்தில் தான் நடத்தியது. கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2ம் அலைகளின் பாதிப்பு காரணமாக அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இதனால் அரசு பணிக்கான காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் தமிழக ஆசிரியர்கள் தகுதி வாரியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு தகுதி வாரியாக தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றது.
6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிகள் திறக்கும் தேதி வெளியீடு!
முதுகலை பட்டதாரி ஆசியர் தேர்விற்கான அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டு, தேர்வுகள் பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மொத்தம் 2,207 காலியிடங்களுக்கு இந்த தேர்வுகள் நடத்தப்பட்டது. 190 தேர்வு மையங்களில் இரண்டரை லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு மையங்கள் அனைத்தும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், தேர்வுக்கான விதிமுறைகளும் கடுமையாக கடைபிடிப்பட்டது.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்வுக்கான விடைகள் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என்றும், தேர்வு மதிப்பெண்கள் இணையத்தில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த தேர்வும் தேர்ச்சி அடைந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மார்ச் மாதத்திற்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதிய தேர்வர்கள் அனைவரும் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை கவனமாக பின்தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.