Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அஞ்சல் துறையின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி சில திட்டங்களில் வட்டி விகிதங்கள் மாற உள்ளது. என்னென்ன திட்டங்கள் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
வட்டி விகிதம்:
இந்தியாவில் தற்போது மக்கள் வங்கிகளை போல அஞ்சலகத்திலும் கணக்கு தொடங்கி வருகின்றனர். ஏனெனில் வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் அளிக்கிறது. மேலும் அஞ்சலகத்தில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருந்து வருகிறது. சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டித்தொகை கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் சேர்த்து கூடுதல் வட்டி தொகை கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. இதில் அஞ்சலகத்தில் உள்ள செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மற்ற திட்டங்களை விட கூடுதல் வட்டி விதிக்கப்படுகிறது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதாருடன் இணைப்பு! எளிய வழிமுறைகள் இதோ!
இந்த நிலையில் ஏப்ரல் 1 முதல் அஞ்சல் நிலையத்தின் பிஎப் தேசிய மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், செல்வமகள் சேமிப்பு ஆகிய திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிஎப் திட்டத்தில் 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை காரணமாக காட்டி வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று பிற திட்டங்களிலும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு விடுமோ என்று மக்கள் அச்சமடைந்த நிலையில் 2022ஜனவரி 1முதல் மார்ச் 31வரையிலான 4-வது காலாண்டில் கடைபிடிக்கப்பட்ட அதேவட்டிவீதம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேசிய சேமிப்புப் பத்திரத்திற்கான வட்டி 6.8%, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டத்துக்கு 7.4% பிபிஎப் திட்டத்துக்கு 7.1% கிசான் விகாஸ் பத்திரத்துக்கு 6.9% வட்டி, செல்வமகள், சேமிப்பு திட்டத்துக்கு 7.6% வட்டி வழங்கப்படும். மேலும் அஞ்சலகங்களில் 5 ஆண்டுக்கு வைக்கப்பட்டுள்ள டெபாசிட்களுக்கு வட்டி 6.7 % , மாத வருமானத் திட்டத்திற்கு வட்டி 6.6% ஆகவும் 5 ஆண்டுக்கான ரெக்கரிங் டெபாசிட்களுக்கு வட்டி 5.8 சதவீதமும் தொடரும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.