அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதாருடன் இணைப்பு! எளிய வழிமுறைகள் இதோ!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - ஆதாருடன் இணைப்பு! எளிய வழிமுறைகள் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - ஆதாருடன் இணைப்பு! எளிய வழிமுறைகள் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதாருடன் இணைப்பு! எளிய வழிமுறைகள் இதோ!

மத்திய அரசின் அறிவிப்பின் படி, நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளுடன் ஆதார் அட்டையை இணைத்திருப்பது அவசியமாகும். இதற்கான எளிய வழிகாட்டுதல்களை இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு இணைப்பு

இப்போது, ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 முதல் ஜூன் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதனால் இதுவரை குடும்ப அட்டைகளுடன் ஆதார் அட்டையை இணைக்காதவர்கள் இந்த செயல்முறைகளை ஜூன் 30 வரை மேற்கொள்ள முடியும். ஏனென்றால் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், பயனாளிகளின் உணவு தானியங்களின் உரிமைப் பங்கு மறுக்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்குகிறது.

அதனால் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் கார்டுகளை இணைத்து ஒவ்வொரு அட்டைதாரர்களும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தங்களுக்கு உரிமையுள்ள உணவு தானியங்களை தடையில்லாமல் பெற முடியும். இப்போது ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம் ஆகஸ்ட் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

Jio, Airtel, VI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சூப்பர் பிளான் இதோ!

இது தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் தங்கள் இருக்கும் இடத்திலிருந்து மானிய விலையில் உணவு தானியங்களை அணுக உதவுகிறது. இத்திட்டத்தில் மொத்தம் 80 கோடி பயனாளிகள் உள்ளனர். இதை 100% ஆக மாற்றுவதற்கு ஆதார், ரேஷன் இணைப்பிற்கான காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தேவையான ஆவணங்கள்:

  • குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல்
  • குடும்பத் தலைவரின் ஆதார் புகைப்பட நகல்
  • அசல் அட்டையுடன், ரேஷன் கார்டின் புகைப்பட நகல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் – முக்கிய அறிவிப்பு!

ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை ஆஃப்லைனில் இணைக்க:

  • உள்ளூர் PDS அல்லது ரேஷன் கடைக்கு செல்லவும்.
  • ரேஷன் கார்டின் நகல் உடன் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருடைய ஆதார் அட்டை நகல்களை எடுத்து செல்லவும்.
  • இப்போது உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், வங்கிக் கடவுச்சீட்டின் நகலை வழங்கவும்.
  • இந்த ஆவணங்களை PDS கடையில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் இணைக்க:

  • PDS இணையதளத்தை திறக்கவும்
  • அதில் உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடவும்.
  • பிறகு ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
  • சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.
  • OTP ஐ உள்ளிட்டு கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!