M.Phil, Ph.D பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – ப்ராஜெக்ட் சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு!
M.Phil, Ph.D பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் தேதி வரும் டிச.31ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில் கால அவகாசத்தை நீட்டித்து பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
M.Phil, Ph.D ப்ராஜெக்ட்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு செயல்பாடுகள் தடைப்பட்டன. அதாவது மாணவர்களின் கற்றல், இளைஞர்களின் வேலை, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக மழலையர் வகுப்பு முதல் உயர்கல்வி பயில்பவர்கள் வரை அனைவருக்கும் கற்றல் பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழகத்தில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி முறையில் இயங்கி வருகின்றன. அதாவது கடந்த மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா தொற்று முற்றிலும் குறையாததால் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையே கடைபிடிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
பென்சன் வாங்குவோருக்கு ஒரு ‘குட்’ நியூஸ் – டிச.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
அந்த வகையில் M.Phil, Ph.D பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பில் ஆய்வு கட்டுரை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு UGC ஆல் அறிவுறுத்தப்படும். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் ஆய்வு கட்டுரைக்கு மதிப்பெண் வழங்கப்படும். அத்தகைய கட்டுரை சமர்பிப்பதற்கு வரும் டிச.31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தற்போது ஆய்வு கட்டுரை சமர்பிப்பதற்கு வரும் 2022 ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து UGC அறிவித்துள்ளது.