பென்சன் வாங்குவோருக்கு ஒரு ‘குட்’ நியூஸ் – டிச.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

0
பென்சன் வாங்குவோருக்கு ஒரு 'குட்' நியூஸ் - டிச.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
பென்சன் வாங்குவோருக்கு ஒரு 'குட்' நியூஸ் - டிச.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
பென்சன் வாங்குவோருக்கு ஒரு ‘குட்’ நியூஸ் – டிச.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

பென்சன் வாங்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்குமாறு அரசு உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ஆம் தேதி அன்று முடிந்த நிலையில் தற்போது அதனை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

தற்போது முதியோர், ஆதரவற்ற, கைவிடப்பட்ட விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பென்சன் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இதில் முதியோர் மற்றும் விதவைகள் மிகுந்த அளவு பயன்பெறுகின்றனர். தற்போது பென்சன் வாங்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் வாழ்வு சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இதனை முடிக்க வேண்டும். இதன் மூலமாக தான் பென்சன் வாங்குபவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்பதை உறுதிபடுத்த முடியும்.

சென்னையில் நாளை (டிச.3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனால் தான் இதனை கட்டாயமான முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனை வங்கிகளில் நேரில் சென்று அல்லது தபால்காரர் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். அத்துடன் பல்வேறு வங்கிகள் வீட்டுக்கே வந்து வாழ்வு சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் சேவைகளையும் வழங்குகின்றன. வீட்டில் அமர்ந்தபடியே வீடியோ கால் மூலமாக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் https://jeevanpramaan.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – தமாகா முக்கிய கோரிக்கை!

தற்போது கொரோனா தொற்று, கனமழை போன்ற பிரச்சினைகளால் அவர்களால் முறையாக குறித்த நேரத்தில் சான்றிதழை சமர்ப்பிக்க முடியவில்லை. மேலும் கால அவகாசம் நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் இன்னும் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்காமல் உள்ளனர். இதனால் பென்சன் வாங்குவதில் சிரமம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு தற்போது கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. அதாவது டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!