Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.34 முதலீடு, ரூ.3.25 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
நாட்டில் அஞ்சலக துறையானது மக்களுக்கு குறைவான முதலீட்டில் அதிக லாபத்தை அளிக்கும் பல திட்டங்களை வழங்கி வருகிறது. அஞ்சலக திட்டத்தில் மக்களின் பணத்திற்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதால் இந்த திட்டங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
PPF திட்டம்:
தபால் நிலையங்கள் மூலம் நாட்டு மக்கள் அதிக பலன்களை அடையும் வகையில் மத்திய அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நடுத்தர மக்கள் மிக குறைந்த அளவிலான முதலீடுகளை செய்வதற்கும் மத்திய அரசு பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் அஞ்சல் அலுவலகத்தை தவிர மற்ற வழிகளில் வருகின்றனர். சேமிப்பு திட்டம், முதலீடு, பிக்சட் டெபாசிட் என அஞ்சல் சேமிப்பில் இருக்கும் பல்வேறு திட்டங்களும் அதிக லாபம் மற்றும் வட்டியை மக்களுக்கு வழங்கும் வகையில் பல திட்டங்கள் அஞ்சலகத்தில் உள்ளது. மத்திய அரசு மிகவும் பாதுகாப்பாக நமது முதலீடு தொகையை நிர்வகித்து வருகிறது.
பென்சன் வாங்குவோருக்கு ஒரு ‘குட்’ நியூஸ் – டிச.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
குறைந்த அளவிலான முதலீடு செய்யும் திட்டத்தில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திட்டத்தின் பலன்களுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது. நீண்ட கால வைப்பு நிதியான இந்த திட்டத்தில் 7.1% வட்டி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் முதல் குறைந்தபட்சம் ரூ.500 வரை நமது முதலீட்டை செய்து கொள்ளலாம். ரூ.1.50 லட்சத்தை ஒரே தவணையில் செலுத்த முடியாத நிலையில் மாதம் ரூ.12,500 என்ற விகிதத்தில் செலுத்தலாம். அதுவும் உங்களுக்கு பெரிய தொகையாக இருந்தால் தினமும் ரூ.34 என்ற அளவில் சேமித்து வைத்தால் மாதம் ரூ.1,054 சேமிக்கலாம்.
சென்னையில் நாளை (டிச.3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த தொகையை நீங்கள் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால், 15 ஆண்டுகளுக்கு பின்னர் உங்களின் சேமிப்பு தொகை ரூ.1.80 லட்சமாக இருக்கும். இந்த பணத்திற்கு அஞ்சலக வட்டியாக ரூ.1.45 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ.3.25 லட்சம் கிடைக்கும். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாக உள்ளபோதிலும், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நீங்கள் திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம். ஆகவே, நீங்கள் செலுத்தி வந்த தொகையை கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு செலுத்தி திட்டத்தை நீடிப்பதால் மூலம் நீங்கள் ரூ.5.32 லட்சம் பெறுவீர்கள். இது மிகவும் பாதுகாப்பான திட்டமாக உள்ளதால் பொதுமக்கள் தங்கள் முதலீட்டை செலுத்தி பலனடைந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.