அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு – மாநில அரசு நடவடிக்கை!
கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
புதிய உத்தரவு:
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அரசின் பங்கு முக்கிய இன்றியமையாததாகும். அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் அரசு ஊழியர்கள் அரசாங்க பணிகளை சரிவர தொய்வின்றி செய்து வருகின்றனர். மக்களுக்கு தேவையானவற்றை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதும், அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு வந்து பெறுவதற்கும் இடையே அரசு ஊழியர்கள் பாலமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு என்று தனியாக பல விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் தற்போது கர்நாடக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – EPF பலன்கள் நிறுத்தம்? முக்கிய அறிவிப்பு!
அம்மாநிலத்தில் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவிப்பது குறித்து பல புகார்கள் எழுந்து வந்தது. இதனை தடுக்கும் வண்ணம் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்களிலும், டிஜிட்டல் ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டும் அரசாங்கத்தை இழிவுபடுத்தும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலம் டிச.31 வரை நீட்டிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!
அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதற்கும், புத்தகங்களை வெளியிடுவதற்கும், உயர் அதிகாரிகளை அவர்களின் அனுமதியின்றி விமர்ச்சிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநில அரசின் இந்த புதிய உத்தரவால் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.