அரசு பள்ளி ஆசிரியர் பணியில் சேர திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
அரசு பள்ளி ஆசிரியர் பணியில் சேர திட்டமிடுவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அரசு பள்ளி ஆசிரியர் பணியில் சேர திட்டமிடுவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அரசு பள்ளி ஆசிரியர் பணியில் சேர திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

புதுச்சேரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநில ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு:

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனால் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுக்கு கோரிக்கை எழுந்த நிலையில் டிஆர்பி தேர்வு வாரியம் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வரும் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2022 ஏப்ரல் மாதம் 3 வது வாரத்தில் டெட் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் நடைபெறும் என்று தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜனவரி 31ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? மாநில அரசுக்கு பரிந்துரை!

தமிழகத்தை தொடர்ந்து தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளது. மாகி பிராந்தியம், கேரள மாநில பாடத் திட்டத்தையும், ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநில கல்வி வாரிய பாடத்திட்டம் என வெவ்வேறு பாடத்திட்டங்களை பின்பற்றுகின்றனர். ‘சிடெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே புதுச்சேரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக இருந்தனர். இந்த நிலையில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வரை புதுச்சேரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சி -டெட் தேர்ச்சி மட்டுமின்றி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலத்தின் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள்! முழு விபரம் இதோ!

மத்திய அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற, மத்திய அரசின், ‘சி -டெட்’ என்ற ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை எதிர்கொள்ள புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் திணறி வருகின்றனர். அதனால் தேர்ச்சி பெறுபவர்கள் விகிதம் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் ஆசிரியர் பணிக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்களாக கருதப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!