ஜனவரி 31ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? மாநில அரசுக்கு பரிந்துரை!
தெலுங்கானாவில் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக ஜனவரி 8 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகளை ஜனவரி 31ம் தேதிக்கு மேல் திறக்கலாமா என்று மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து காணப்பட்டு வரும் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக ஜனவரி 8 முதல் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று நிலைமை தற்போது மேம்பட்டு வருவதால், ஜனவரி 31 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்குமா என்று தெலுங்கானா உயர் நீதிமன்றம் மாநில அரசிடம் கேட்டுள்ளது.
TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள்! முழு விபரம் இதோ!
முன்னதாக தெலுங்கானாவில் ஜனவரி 8 முதல் மூடப்பட்ட பள்ளிகளை சங்கராந்தி விடுமுறைக்கு பிறகு மீண்டும் திறக்கும் திட்டம் குறித்த விவரங்களை உயர்நீதிமன்றம் கோரியது. இதற்கு பதில் அளித்த மாநில அரசின் வக்கீல், இது தொடர்பான முடிவு நிலுவையில் உள்ளது என்று பதில் அளித்திருந்தார். இதற்கிடையில் ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட இருந்த நிலையில், இந்த நடவடிக்கை ஜனவரி 30ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதற்கிடையில் கடந்த ஜனவரி 25ம் தேதியன்று கொரோனா தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் ரிட் மனுக்கள் விசாரிப்பின் போது, மாநிலம் முழுவதும் கொரோனா நேர்மறை விகிதம் 3.16% ஆக இருப்பதாக பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனர் ஜிஎச் ஸ்ரீனிவாஸ் ராவ் தெரிவித்திருந்தார். இப்போது இந்த மனு தொடர்பான மறு விசாரிப்பு இன்று (ஜன.28) நடைபெற்ற நிலையில், தெலுங்கானாவில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகளை ஜனவரி 31ம் தேதிக்கு மேல் திறக்கலாமா என்று மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. என்றாலும் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை மாநில அரசின் இறுதி முடிவில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.