தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மாணவர்களின் நலன் அடிப்படையில் தேசிய திறனாய்வு தேர்வு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக ஜனவரி 31 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகிறது. அந்த வகையில் NCERT நடத்தும் இந்த தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது.
ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா – பின்தங்கிய இந்திய அணி!
முதல் கட்டத் தேர்வு மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2வது கட்டமாக தேசிய அளவில் தேர்வு நடைபெறும். தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு மூலம் மொத்தம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் போது மாதந்தோறும் ரூ.1,250 உதவித்தொகையும், அதற்கு பின் அவர்களுக்கு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் போது மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். மேலும் Ph.D., படிப்புக்கு உதவித்தொகை பெறலாம்.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – பணம் செலுத்தும் வழிமுறைகள்!
ஆனால் ஞாயிறு ஊரடங்கு காரணமாக ஜனவரி 23 ஆம் தேதி நடைபெற இருந்த நடப்பு கல்வியாண்டின் தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 29 ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வு இயக்கம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதால் 29ம் தேதி நடக்க இருந்த தேர்வு மீண்டும் பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை 25ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.