நாடு முழுவதும் பிப்ரவரி 13 வரை முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!
உலகின் பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் பெருந்தொற்று அதிகமாக பரவி வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜப்பான் நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று சுமார் 2 ஆண்டுகளை கடந்து பரவி வருகிறது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், இஸ்ரேல், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது. இத்தகைய ஓமைக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானதாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு ஒத்திவைப்பு!
மேலும் இந்த ஓமைக்ரான் தொற்று ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து தாக்குவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் உலகின் பல்வேறு நாடுகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு அமலபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பானில் கடந்த சில தினங்களாக கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இருந்து வருகிறது.
ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா – பின்தங்கிய இந்திய அணி!
அதனால் டோக்கியோ உள்ளிட்ட 13 பகுதிகளில் வரும் பிப்.13ம் தேதி வரை கூடுதல் கொரோனா கட்டுப்பாடு விதிக்க மருத்துவ நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் அவர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதே தவிர முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.