தமிழகத்திற்கு கூடங்குளம் மின்சார தேவை? ஒன்றிய அரசுக்கு கடிதம்!
தமிழகத்திற்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3வது மற்றும் 4வது அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தேவை என்று தமிழக மின்வாரியம் ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளது.
கூடங்குளம் மின்சாரம்
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் சீரான மின் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மின்வாரியத்திற்கு வலியுறுத்தியுள்ளார். அதனால் இது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா கால கட்டத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திற்கு மின் தேவை என்பது கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் தமிழகத்திற்கு கூடுதலான மின்சாரம் தேவை என்று வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு தமிழகத்தின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண் இயக்குனர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தின் தற்போதைய மின்சார தேவை 17,000 மெகா வாட்டாக உள்ளது. இது 2025-26ம் ஆண்டில் 21,000 மெகாவாட்டாக உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1வது மற்றும் 2வது அலகில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்திற்கே கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதில் தற்போது 55% மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கிறது. அதாவது தற்போது உற்பத்தி செய்யப்படும் 2000 மெகா வாட் மின்சாரத்தில் 1150 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – ஓய்வூதியம் குறித்த அதிரடி உத்தரவு!
இதையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வருகிற 2025ம் ஆண்டு மே மாதத்தில் 3வது அலகிலும், இதே போல் டிசம்பர் மாதத்தில் 4வது அலகிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. அதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது. அதன்படி 3 மற்றும் 4ம் அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்திற்கு தேவையான நேரத்தில் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது என்றும் இவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.