செப்.30 தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!
கோவை மாவட்ட அரசு கலை கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வரும் செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவர் கலந்தாய்வு:
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூலை 19 அன்று மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து கடந்த ஜூலை 26ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் பெற்ற நிலையில் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. அதனால் அரசு கல்லூரிகளில் 25% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு 10% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு இடம் அளிக்கப்பட்டது.
கல்லூரியை 2 நாட்களுக்கு மூட உத்தரவு – பேராசிரியருக்கு கொரோனா தொற்று எதிரொலி!
மேலும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுப்பதால் மாணவர் சேர்க்கை முழுவதும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வருகிறது. சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இரு கட்டங்களாக நடைபெற்றது. மற்ற கல்லூரிகளை தொடர்ந்து கோவை அரசு கலை கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு வரும் செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை – ICMR ஆய்வறிக்கை!
இக்கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் பிஎஸ்சி கணிதம், இயற்பியல், என மொத்தம் 21 இளநிலை பட்ட படிப்புகள் உள்ளன. இங்கு 2021-22ம் ஆண்டிற்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு அனைத்து பிரிவுகளுக்களுக்குமான கலந்தாய்வு வரும் 30 ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும் விண்ணப்பிக்காதவர்களும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.