தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை – ICMR ஆய்வறிக்கை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என ICMR ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதனால் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் மீண்டும் விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ICMR அறிக்கை:
நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கதினால் பல பாதிப்புகள் ஏற்பட்டது. அதன் பின் மத்திய, மாநில அரசின் கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. பல மாநிலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு வந்துள்ளனர். மேலும் உயர்நிலை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழக அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு – பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து!
இந்நிலையில் கொரோனா காலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்சி ஐசிஎம்ஆர் (ICMR)ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் ஆய்வறிக்கை வெளியான நிலையில் அதில், ஆரம்பகட்ட கல்வி மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் கொரோனா தொற்றால் பாதிப்படைவர் என்று கூறி அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. ஆனால் இவர்களது ஆய்வில் கூறியதாவது, ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு பாதிப்பானது குறைவாக காணப்படுகிறது. எனவே அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படலாம்.
தமிழகத்தில் அக்.2 வரை இம்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
ஆனால் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று தாக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே முதலில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் சிறிது நாட்கள் கழித்து திறக்கலாம் என இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர். இதனால் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த ஆய்வறிக்கையானது ஐசிஎம்ஆர் இயக்குனர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்க்கவாவின் மேற்பார்வையில் நடைபெற்றது. மேலும் ஐசிஎம்ஆர் தலைமை தொற்று நிபுணர்கள் டாக்டர் சமீரான் பாண்டா மற்றும் டாக்டர் தனு ஆகியோரும் இந்த ஆய்வில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Is this real
No bro it’s 98% fake ,said by my chemistry sir!
PLEASE HOLIDAY
Because of corona issues