கல்லூரியை 2 நாட்களுக்கு மூட உத்தரவு – பேராசிரியருக்கு கொரோனா தொற்று எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் உதகை கலை கல்லூரியில் பேராசிரியர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளதால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கல்லூரி விடுமுறை:
கொரோனா தாக்கம் நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடியது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை குறைக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கொரோனா பரவும் விகிதம் படிப்படியாக குறையத் தொடங்கியது.
தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை – ICMR ஆய்வறிக்கை!
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் கல்லூரிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். அதனை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9, 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
தமிழக அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு – பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து!
கொரோனா 2ம் அலையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கொரோனா படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. உதகை கலை கல்லூரியில் பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இரண்டு நாட்களுக்கு கல்லூரி மூடப்படு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 3,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.