பாக்கியா தொழில் தொடங்க அனுமதி வழங்கும் கோபி, மாஸ் என்ட்ரி கொடுத்த பாக்கியா – சீரியலில் திடீர் திருப்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவை கோபி தொழில் செய்ய வேண்டாம் என சொன்னதை கேட்டு பாக்கியா மிகவும் வருத்தப்படுகிறார். இந்நிலையில் இந்த விஷயத்தில் ராதிகா தலையிட அதனால் கோபி வேறு வழியில்லாமல் பாக்கியாவை தொழில் செய்ய சொல்கிறார். அதனால் புது பொலிவுடன் பாக்கியா மீண்டும் தொழிலை தொடங்க போகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் முழு உழைப்பையும் போட்டு தொடங்கிய தொழிலில் வந்த சிறு பிரச்சனையால் இனிமேல் தொழில் செய்ய வேண்டாம் என கோபி சொல்லிவிடுகிறார். ஆனால் பாக்கியா மீண்டும் தொழிலை செய்ய கோபி நான் பேசமாட்டேன் சாப்பிட மாட்டேன் என சொல்லி மிரட்டுகிறார். அதனால் பாக்கியா வேற வழிஇல்லாமல் தொழிலை கை விட முடிவு செய்கிறார். இந்நிலையில் ராதிகாவிடம் பாக்கியா இது பற்றி சொல்லி வருத்தப்படுகிறார்.
Exams Daily Mobile App Download
அப்போது ராதிகா பாக்கியாவிற்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்து பாக்கியாவின் கணவரை சந்தித்து பேச முடிவு செய்கிறார். கோபியிடம் இது பற்றி சொல்ல மாட்டிக் கொண்டோம் என நினைத்து பதட்டம் அடைகிறார். ராதிகாவை சமாளித்து பாக்கியா கணவரிடம் நான் பேசுகிறேன் என சொல்ல பேசியது போலவும் அதை கேட்டு அவர் ஒப்புக் கொண்டது போல ட்ராமா போடுகிறார். அதனால் வேறு வழி இல்லாமல் பாக்கியாவை மீண்டும் தொழில் தொடங்க கோபி அனுமதிக்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்காக மீனா ஹேமாவின் புடவை ஷாப்பிங் – வைரலாகும் வீடியோ!
பாக்கியா கோபி சொன்னதை கேட்டு சந்தோசப்பட மீண்டும் புது பொலிவுடன் தனது வேலையை செய்கிறார். ஆனால் பாக்கியா மீது பழி வந்துள்ள நிலையில் அவர் தன்னுடைய நேர்மையை காட்ட புதிதாக எதாவது திட்டமிட இருக்கிறார். கண்ணீருடன் மூடிய அலுவலகத்தை செம மாஸாக திறக்கிறார். செல்வி உடன் மீண்டும் பாக்கியா அலுவலகத்திற்குள் வரும் எபிசோடுகள் இனி வரும் வாரங்களில் வர இருக்கிறது. அதனால் பாக்கியலட்சுமி சீரியலில் இனி சந்தோசத்திற்கு குறைவில்லாமல் செல்ல இருக்கிறது.