TNPSC குரூப் 2, குரூப் 2A காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC குரூப் 2, குரூப் 2A காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC குரூப் 2, குரூப் 2A காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC குரூப் 2, குரூப் 2A காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் 2, குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23 ஆகும்.

முக்கிய தகவல்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் கொரோனா காலகட்டத்தில் வெளிவராமல் இருந்தது. இருப்பினும் தற்போது அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கு, தேர்வுக்கான அறிவிப்பு கடந்த18ம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பு அடிப்படையில் இன்று முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழக பள்ளிகள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இதனை தொடர்ந்து நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இருப்பினும் ஒரு சில பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலகட்டத்தில் TNPSC போட்டி தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் அரசு அறிவித்துள்ள படி தற்போது பொது பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 4ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு? அரசுக்கு கோரிக்கை!

முன்னதாக இந்த தேர்வில் பங்கேற்க அதிகபட்ச வயது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா காரணமாக வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மற்ற பிரிவினர், எஸ்சி, எஸ்டி, அருந்ததியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத உச்சபட்ச வயது வரம்பு கிடையாது. இந்த குரூப்2 தேர்வானது முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என்று இரண்டு தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றவர்க்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இந்த குரூப்2a தேர்வுக்கு முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என்று இரண்டு தேர்வுகள் மட்டும் நடைபெற உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!