நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட திருமண புகைப்படங்கள் – ரசிகர்கள் வாழ்த்து!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தோழியின் திருமணத்தில் கலந்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ்:
வெள்ளித்திரையில் அறிமுகம் ஆன சில படங்களிலேயே அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் தமிழில் முதன் முதலாக விக்ரம் பிரபு உடன் ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்துள்ளார். அந்த படம் பெரிய வரவேற்பை அளிக்கவில்லை என்றாலும், அடுத்து ரஜினி முருகன் படம் பெரிய ஹிட்டாக அமைந்தது. அதன் பிறகு நடித்து வந்த ரெமோ, பைரவா, சர்கார், மகாநதி போன்ற அனைத்து படங்களும் இவரின் திறமையை உலகிற்கு உணர்த்தியது. தொடர்ந்து வெற்றி படங்களை தந்த காரணத்தால் குறுகிய காலத்தில் பெரிய நடிகைகளின் பட்டியலில் இணைந்து முன்னணிக்கு வந்தார் கீர்த்தி.
திருமணத்திற்கு பிறகு ஒன்றிணைந்த ‘செம்பருத்தி’ ஷபானா, ரேஷ்மா – புதுமண ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்து!
மிக சிறிய வயதிலேயே நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட மகாநடி படத்தில் இவரின் நடிப்பை மொத்த திரை உலகமும் பாராட்டி வந்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் கீர்த்தி பெற்றுள்ளார். மேலும், தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக உள்ளார்.இந்நிலையில், சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி நடித்திருந்தார். இதில் கீர்த்தியின் வேடம் மிகவும் சிறப்பாக இருந்தது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் குழுவினருடன் இணைந்த ரோஷினி, அகிலன் – ரசிகர்கள் உற்சாகம்!
மிகவும் பிஸியான நடிகையான கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நண்பர்களுடன் தோழியின் திருமண விழாவில் கலந்து கொண்டார். திருமண விழாவில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்கு திருமண சந்தோசம் மிக முக்கிய காரணமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கீர்த்தி தனது தோழிகளுடன் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது அதிக லைக்குகளை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதனால் இணையத்தில் அதிகம் பகிரப்படும் புகைப்படமாகவும் மாறிவருகிறது.