திருமணத்திற்கு பிறகு ஒன்றிணைந்த ‘செம்பருத்தி’ ஷபானா, ரேஷ்மா – புதுமண ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்து!
சமீபத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை நடிகைகள் ரேஷ்மா மற்றும் ஷபானா இருவரும் திருமணத்திற்கு பிறகு ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர்.
நெருங்கிய தோழிகள்:
சின்னத்திரை நடிகர், நடிகைகள் ஷூட்டிங் சமயங்களில் தங்களுடன் உடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகளுடன் நட்போடு பழகுவது இயல்பான விஷயம் தான். ஆனால் ஜீ தமிழ் சேனலில் நடிக்கும் ‘செம்பருத்தி’ ஷபானா , ‘யாரடி நீ மோகினி’ சைத்ரா, நக்ஷத்திரா, ‘பூவே பூச்சூடவா’ ரேஷ்மா ஆகிய நான்கு பேரும் மிகவும் நெருங்கிய தோழிகள். இவர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வைத்தே அவர்களின் நட்பின் ஆழத்தை புரிந்து கொள்ளலாம்.
பிரசவத்திற்கு பின் போட்டோஷூட் நடத்திய “பாரதி கண்ணம்மா” பரீனா – ரசிகர்கள் உற்சாகம்!
அதிலும், சமீபத்தில் கடந்த மாதம் செம்பருத்தி ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி ஆர்யன் இருவருக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு, சில நாட்களில் ரேஷ்மா மற்றும் மதன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. இவர்கள் திருமணத்தின் போது ஒருவருக்கொருவர் மாறி மாறி உறுதுணையாக இருந்ததை அனைவரும் காண முடிந்தது. இந்த ஜோடிகளின் திருமணம் தான் சின்னத்திரையில் கடந்த மாதத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாக அனைவராலும் பகிரப்பட்டது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் குழுவினருடன் இணைந்த ரோஷினி, அகிலன் – ரசிகர்கள் உற்சாகம்!
திருமணம் முடிந்த பிறகு சில நாட்கள் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இவர்கள் பல இடங்களுக்கும் சென்று அங்கிருந்து தொடர்ந்து பல புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் திருமணத்திற்கு பிறகு தங்கள் கணவருடன் நால்வரும் சேர்ந்து சமீபத்தில் எடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோக்கள் தற்போது அதிக லைக்குகளை குவித்து வருகிறது. இதனால் இவர்களின் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.