மார்ச் 5 வரை தடை உத்தரவு நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு! ஹிஜாப் விவகாரம்!

0
மார்ச் 5 வரை தடை உத்தரவு நீட்டிப்பு - மாவட்ட நிர்வாகம் உத்தரவு! ஹிஜாப் விவகாரம்!
மார்ச் 5 வரை தடை உத்தரவு நீட்டிப்பு - மாவட்ட நிர்வாகம் உத்தரவு! ஹிஜாப் விவகாரம்!
மார்ச் 5 வரை தடை உத்தரவு நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு! ஹிஜாப் விவகாரம்!

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மார்ச் 5ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 1 ஆகிய விடுமுறை நாட்களில் இந்த உத்தரவு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு

சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் மிகப்பெரிய கலவரமாக வெடித்த ஹிஜாப் பிரச்சனை காரணமாக கடந்த பிப்ரவரி 9ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள் கடந்த வாரம் முதல் மீண்டுமாக திறக்கப்பட்டது. இதற்கிடையில் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், உடுப்பி மற்றும் பெங்களூரு பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2, 2A தேர்வு தேதி மாற்றம்? விண்ணப்பதாரர்கள் கோரிக்கை! காரணம் இதுதான்!

அந்த வகையில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகம், பாலிடெக்னிக் மற்றும் பட்டயக் கல்லூரிகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட தடை உத்தரவு பிப்ரவரி 23ஆம் தேதி மாலை 6 மணி வரை அமலில் உள்ளது. இப்போது, இந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் (பிப்.23) முடிவுக்கு வருவதால், மாவட்டம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் 200 மீட்டர் சுற்றளவுக்குள் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மார்ச் 5ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிப்பதாக துணை ஆணையர் எம் குர்மா ராவ் அறிவித்துள்ளார்.

TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022 – தேர்வு தேதி, தகுதி,ஊதியம் & முழு விவரங்களுடன்..!

அதாவது, ஹிஜாப் அணிவதால் பள்ளி வளாகத்தில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் கீழ், ஒரே இடத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவது, கத்தி உள்ளிட்ட ஆயுதம் ஏந்தி வலம் வருவது, ஆத்திரமூட்டும் வகையில் கோஷங்கள் எழுப்புவது, ஊர்வலம் செல்வது, போராட்டம் நடத்துவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 1 ஆகிய விடுமுறை நாட்களில் இந்த தடை உத்தரவு பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!