TNPSC குரூப் 2, 2A தேர்வு தேதி மாற்றம்? விண்ணப்பதாரர்கள் கோரிக்கை! காரணம் இதுதான்!
தமிழகத்தில் TNPSC குரூப் 2 தேர்வு 2022 மே 21 அன்று நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
TNPSC குரூப் 2:
தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வான குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பை பலரும் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் பிப்ரவரி மாதம் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்தது. அதன்படி இன்று குரூப் 2, 2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வாணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெளியான அறிவிப்பில் குரூப் 2, 2A தேர்வின் முதல் நிலை தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்று செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு LIC வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிலையில் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏனெனில் தேர்வு மே 21ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வேளைக்கு செல்பவர்கள் தேர்வை எழுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்வர். அனைவரும் பங்கு பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் நலன் கருதி தேர்வர்கள் மே 22ம் தேதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post Office பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் – தினசரி ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ்!
இந்த நிலையில் இன்று வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு தேர்வு தேதி மாற்றம் குறித்து தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு தேர்வு நடைபெறப்போவது குறிப்பிடத்தக்கது. இந்த குரூப் 2, 2A தேர்வின் கீழ் சுமார் 5831 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் முதல் நிலை மற்றும் முதன்மை நிலை தேர்வுகளுக்கு பிறகு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.