Post Office பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் – தினசரி ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ்!
மத்திய அரசின் தபால் நிலைய திட்டங்களில் அதிக வரவேற்பு பெற்று வரும் திட்டம்,பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் வட்டி வருமானம், பங்களிப்பு, முதிர்வு தொகை ஆகிய மூன்றுக்கும் வரிவிலக்கு கிடைக்கும். இதுவே இத்திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்:
முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கக் கூடிய சில அரசு திட்டங்கள் உள்ளன. அத்தகைய ஒரு திட்டம் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டத்தில் உள்ளது. வங்கிகளை போன்று, மக்களுக்கு பயனுள்ள பல வகையான சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (Post Office PPF Account) திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் சிறு பணத்தை முதலீடு செய்து நல்ல முதிர்வுத் தொகையை பெறலாம். இந்த திட்டத்திற்கான கணக்கை நாட்டில் உள்ள அனைத்து குடிமகனும் அருகில் உள்ள தபால் நிலையங்களில் தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிஏ 2 வைரஸ் எதிரொலி! பொதுமக்கள் கலக்கம்!
இந்த திட்டம் குறைவான ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு உள்ள திட்டம் ஆகும். இந்த திட்டம் நீண்ட காலம் வருமானம் தரும் திட்டமாகும் இந்த பிபிஎஃப் கணக்கைத் திறக்க குறைந்தபட்சம் ரூ .500 மூலம் திறக்க முடியும். அதிகபட்சமாக இந்த கணக்கில் ஒவ்வொரு வருடமும் அதிகபட்சம் 1.5 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இந்த திட்டம் 15 வருடங்கள் ஆனது. முதிர்வு காலத்திற்கு முன்பு பணத்தை திரும்பப் பெற முடியாது. ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 5-5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்க முடியும்.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மாதம் 10 கிலோ இலவச ரேஷன்! முழு விவரம் இதோ!
இத்திட்டத்தில் 7.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 150 ரூபாய் வீதம் மாதத்திற்கு சுமார் ரூ.4500 முதலீடு செய்தால், முதிர்வு காலம் 20 ஆண்டுகளில் முதலீடு ரூ.10.80 லட்சமாக இருக்கும். இதனுடன் கூட்டு வட்டியும் சேர்த்து, முதிர்வு நேரத்தில் சுமார் ரூ.20 லட்சத்தைப் பெறலாம். மேலும், வருமான வரிச் சட்டத்தின் 80c பிரிவின் கீழ் வரிச் சலுகைகளையும் பெறலாம்.