ஜூலை 5 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று 2வது அலை பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கூடுதல் தளர்வுகள் உடன் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் ஜூலை 5ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கர்நாடகா மாநில அரசு ஜூன் 21ம் தேதி வரை அன்லாக் 2.0 செயல்முறைகள் அமலுக்கு வருவதாக அறிவித்து உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் மற்றும் பி.எம்.டி.சி பேருந்துகள் மற்றும் பெங்களூரில் 50% பயணிகளுடன் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை துவங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு உட்பட 16 மாவட்டங்களில் COVID-19 நேர்மறை விகிதம் 5%க்கும் குறைந்து வருவதால், ஊரடங்கை தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு ரத்து, ஜூலை 1 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் மாலை 5 மணி வரை ஏர் கண்டிஷனர்கள் இல்லாமல் மதுபான கடைகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளை இயங்க அனுமதித்துள்ளது. மேலும் மண்டியா, பெலகாவி, உத்தர கன்னட, கொப்பல், சிக்கபல்லாபூர், துமகுரு, கோலார், பெங்களூரு நகரம், பிபிஎம்பி, கடக், ரைச்சூர், பாகல்கோட், கலாபுராகி, ஹவேரி ராமநகரம், யத்கீர் ஆகிய 16 மாவட்டங்களில் ஜூலை 5 வரை இந்த தளர்வுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஜூன் 28 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? இன்று தளர்வுகள் அறிவிப்பு!
இந்த மாவட்டங்களில், பார்வையாளர்கள் இல்லாத வெளிப்புற படப்பிடிப்பு மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் அனுமதிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் திறந்திருக்கும், மேலும் லாட்ஜ்கள் 50% திறனுடன் திறக்கலாம். ஜிம்களும் 50% பயனர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பூங்காக்கள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீச்சல் குளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து சினிமா அரங்குகள், மால்கள், ஏர் கண்டிஷனர்கள் கொண்ட ஷாப்பிங் வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஜூலை 5 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.