முழு ஊரடங்கு ரத்து, ஜூலை 1 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

5
முழு ஊரடங்கு ரத்து, ஜூலை 1 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
முழு ஊரடங்கு ரத்து, ஜூலை 1 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
முழு ஊரடங்கு ரத்து, ஜூலை 1 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தெலுங்கானா மாநில அரசு இன்று முதல் முழு ஊரடங்கில் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. மேலும் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

ஊரடங்கு ரத்து:

தெலுங்கானாவில் சனிக்கிழமையன்று 1,362 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதனால் மொத்த பாதிப்பு 6,12,196 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் உயிரிழப்புகள் எண்ணிக்கை 3,556 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவார்கள் எண்ணிக்கை 5,90,072 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு 18,568 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கொரோனா உயிரிழப்புகள் விகிதம் 0.58% மற்றும் மீட்பு விகிதம் 96.38% ஆக உள்ளது.

தமிழகத்தில் ரூ.4000 கொரோனா நிவாரண நிதி திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!

இந்நிலையில் குறைந்து வரும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு மத்தியில் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுவதுமாக ரத்து செய்ய மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் கூறி சுகாதாரத் துறை அறிக்கை சமர்ப்பித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மே 12 அன்று மாநிலத்தில் முதன்முதலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.

சென்னையில் ஜூன் 21ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பொதுமக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும், இயல்புவாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் தவறாமல் படிங்க – முடக்கப்படும் சேவைகள்!

மேலும் இந்தியாவில் முதல் மாநிலமாக பள்ளி, கல்லூரிகளை முழுவதுமாக திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜூலை 1 முதல் தெலுங்கானாவில் உள்ள கல்வி நிறுவனங்களையும் முழு திறனுடன் மீண்டும் திறக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், மாணவர்களின் கட்டாய வருகை, ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களைத் தயாரிக்கவும், அதை விரைவில் வெளியிடவும் அமைச்சரவை கல்வித் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!