மே 27 முதல் மே 30 வரை தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் – துணை கமிஷனர் அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் மே 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் மே 30 காலை 6 மணி வரை கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போதும் கொரோனா பாதிப்பானது ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊரடங்கில் மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கடந்த மே 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்டு வருகிறது. தவிர பலி எண்ணிக்கையில் சற்று ஏறுமுகம் காணப்படுகிறது. தொடர்ந்து பெங்களூர் மாநகரத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுவதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த தயாராக உள்ள மாநிலங்களின் பட்டியல் இங்கே!!
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தின் கலாபுராகி மாவட்டத்தில், மே 27 காலை 6 மணி முதல் மே 30 காலை 6 மணி வரை மூன்று நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை செயல்படுத்துவதாக கலாபுராகி மாவட்ட துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.