12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த தயாராக உள்ள மாநிலங்களின் பட்டியல் இங்கே!!
கொரோனா இரண்டாம் அலை நாட்டில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த நிலையிலும், ஒரு சில மாநிலங்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த தயாராக உள்ளது. அந்த மாநிலங்களின் பட்டியலைக் குறித்து இங்கே காண்போம்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தை மே 23ம் தேதி நடத்தியது. அதில், இரண்டு விதமான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டது. முதல் வாய்ப்பாக, முக்கிய பாடங்களுக்கான தேர்வை மட்டும் நடத்துவது. இரண்டாவது வாய்ப்பாக, ஒன்றரை மணி நேர தேர்வாக இரண்டு மதிப்பெண்கள் மற்றும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் உள்ள தேர்வை நடத்துவது. 12ம் வகுப்பு தேர்வை நடத்த தயாராக உள்ள மாநிலங்களை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா:
மாணவர்களின் எதிர்கால நலனுக்காக 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது அவசியம் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர்:
சத்தீஸ்கர் இடைநிலைக் கல்வி வாரியம் (சிஜிபிஎஸ்இ) ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நேரடி முறையில் நடத்துகிறது.
தமிழகத்தில் 4 மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் பணிமாற்றம் – அரசு உத்தரவு!!
தமிழ்நாடு:
மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புகளின் நிலைமை குறைந்த பின்னர் தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் இது முக்கிய பங்கு வகிப்பதால் தமிழகமும் 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்த விரும்புகிறது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
ஹரியானா:
ஹரியானா கல்வி வாரியம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை நடத்த தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசம்:
மத்தியபிரதேசம் மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து ஜூன் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் மற்றும் பொது நிர்வாக இயக்குனர் இந்தர் சிங் பர்மர் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அசாம்:
அசாம் இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் அசாம் மேல்நிலைக் கல்வி கவுன்சில் ஆகியவற்றுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரனோஜ் பெகு அறிவித்துள்ளார். அதன்படி, இந்த ஆண்டு மெட்ரிக் அல்லது உயர்நிலை தேர்வுகளுக்கு வரும் மாணவர்கள் மூன்று பாடங்களில் மட்டுமே தோன்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குஜராத்:
குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா, 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் அறிவியல் மற்றும் பொதுத் துறைகளுக்கு பொருத்தமான நேரத்தில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சருடன் கலந்துரையாடிய பின்னர் தேர்வுகளின் நேரம் மற்றும் முறையை வாரியம் தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.
12 மாநிலங்கள் கொரோனா தொற்றிற்கு இடையில் தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஎஸ்இ மூலம் தேர்வுகளை நடத்துவதற்கான விருப்பங்களை தனது அரசாங்கம் ஆதரிக்கவில்லை என்றும், மாணவர்களுக்கு தடுப்பூசி போடாமல் தேர்வு நடத்துவது பெரிய அளவிலான ஆபத்தில் முடியும் என்று கூறியுள்ளார்.
Plzzz use revision mark and give a end for all problem plzz understand our depression