1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் – இன்று முதல் தொடக்கம்!!
காரைக்காலில் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் இலவசமாக பால் வழங்கப்படுகிறது. கொரோனா காரணமாக இந்த திட்டம் மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து நாளை முதல் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பால்:
காலை சிற்றுண்டி திட்டத்தின் படி காரைக்காலில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுடன் பால் வழங்கப்படும். கொரோனா காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் காரைக்கால் வடமறைக்காடு (கிழக்கு) அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்தை மீண்டும் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் கே.கோவிந்தராஜ், முதன்மை கல்வி அதிகாரி ஏ.அல்லி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டத்தின் படி காரைக்கால் மாவட்டத்தின் படி நேற்று காரைக்காலில் உள்ள 82 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியுடன் பால் வழங்கப்பட்டது. இன்று மீதமுள்ள பள்ளிகள் என மொத்தம் 101 அரசு தொடக்கப்பள்ளி மற்றும் 5 அரசு உதவிபெறும் பள்ளிகள் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக 12 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி – விண்ணப்பிக்க அழைப்பு!!
ஏற்கனவே புதுச்சேரி அரசு துணைநிலை ஆளுநர், இன்று முதல் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வகுப்புகள் செயல்படும் எனவும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.