மீண்டும் திறக்கப்படும் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த கனியாமூர் தனியார் பள்ளி – சீரமைப்பு பணி தொடக்கம்!

0
மீண்டும் திறக்கப்படும் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த கனியாமூர் தனியார் பள்ளி - சீரமைப்பு பணி தொடக்கம்!
மீண்டும் திறக்கப்படும் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த கனியாமூர் தனியார் பள்ளி - சீரமைப்பு பணி தொடக்கம்!
மீண்டும் திறக்கப்படும் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த கனியாமூர் தனியார் பள்ளி – சீரமைப்பு பணி தொடக்கம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த பள்ளி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் பள்ளி செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

பள்ளி சீரமைப்பு:

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற ஸ்ரீமதி எனும் மாணவி ஒருவர் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்துள்ளார். இவர் பள்ளியின் 3 வது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஆனால் மாணவியின் உடலை பரிசோதித்ததில் உடலில் காயங்கள் இருப்பதாகவும் மாணவியின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்தை சேதப்படுத்தியும், பேருந்திற்கும் தீ வைத்தும் கலவரத்தை ஏற்படுத்தினர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் பள்ளியில் ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி பள்ளி நிர்வாகத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

குழந்தைகளுக்கு பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் – தமிழக அமைச்சரின் முக்கிய விளக்கம்!

Exams Daily Mobile App Download

இந்த வழக்கு விசாரணையில் மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து 45 நாட்களுக்கு பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். தற்போது கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளியில் கண்காணிப்பு பணிக்காக ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விரைவில் பள்ளி செயல்படும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!