குழந்தைகளுக்கு பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் – தமிழக அமைச்சரின் முக்கிய விளக்கம்!

0
குழந்தைகளுக்கு பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் - தமிழக அமைச்சரின் முக்கிய விளக்கம்!
குழந்தைகளுக்கு பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் - தமிழக அமைச்சரின் முக்கிய விளக்கம்!
குழந்தைகளுக்கு பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் – தமிழக அமைச்சரின் முக்கிய விளக்கம்!

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முக்கிய அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

இன்புளூயன்சா காய்ச்சல்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ், குரங்கு அம்மை போன்ற நோய் தொற்றை தொடர்ந்து தற்போது இன்புளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. எப்போதும் மழை காலங்களில் அதிகரிக்கும் குளிரின் காரணமாக சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். மேலும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும் இந்த மழை காலங்களில் கொசுக்கள் உற்பத்தியால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றும் பரவும். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அதனால் இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 1,044 நபர்களுக்கு இன்புளூயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இதில் 364 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். பெரும்பாலும் குழந்தைகள் அதிகம் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த இன்புளூயன்சா காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது மற்ற மாணவர்களுக்கும் எளிதில் காய்ச்சல் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. விரைவில் துவங்கவுள்ள சூப்பர் திட்டம் – குவியும் வரவேற்பு!

Exams Daily Mobile App Download

இதனை கருத்தில் கொண்டு காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி பார்த்துக் கொள்ளும்படி அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் காய்ச்சல் தீவிரம் இல்லை, அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டிய சூழ்நிலை தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தடுப்பு பணியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து 12-17 வயதுள்ள சிறார்களுக்கு பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!