கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திடீர் மாற்றம் – அரசு உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் தற்போது வேறொரு பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இவருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட புது ஆட்சியராக ஷ்ரவண் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மாற்றம்
கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி பயின்ற மாணவி மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதாவது, மாணவியின் தற்கொலைக்கு ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் தான் முழுக்க முழுக்க காரணம் என மாணவியின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், அந்த மாணவியே எழுதியது போன்ற கடிதம் ஒன்று சிக்கியது. அதாவது, ஆசிரியர்கள் படிக்கவில்லை என சொல்லி துன்புறுத்தியதால் தான் தற்கொலை செய்துகொள்கிறேன் என மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது.
இனி ‘இவர்களுக்கு’ பென்ஷன் தொகை கிடையாது? உச்சநீதிமன்றம் அதிரடி!
ஆனால், அந்த மாணவியின் பெற்றோர்கள் என் மகளின் கையெழுத்து இது கிடையாது என கூறிய நிலையில் உண்மை நிலவரம் என்னவென்று தெரியாமல் இந்த வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பலரும் வன்முறை கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், பள்ளியில் உள்ள அனைத்து பொருட்களையும் எரித்து நாசமாக்கிவிட்டனர். மேலும், தற்போது அந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் மொத்த சான்றிதழ்களையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இதனால், கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுக்கவே பதட்டமான சூழல் நிலவியுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். மேலும், ஸ்ரீதர் மாவட்ட ஆட்சியர் பதவியில் இருந்து விலகி சென்னை – கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட இருக்கிறார். கள்ளக்குறிச்சியில் புது மாவட்ட ஆட்சியராக ஷ்ரவண் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.