கள்ளக்குறிச்சி விவகாரம்: தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் இடமாற்றம் – பின்னணி என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட கல்வி அலுவலரின் செயல்பாடுகள் திருப்தி இல்லாததால் அவரை பணிமாறுதல் செய்து கல்வித்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கல்வி அலுவலர் மாற்றம்
தமிழகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதியன்று மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்வி நிர்வாகத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கூறி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பலர் போராட்டத்தில் இறங்கினார்கள். இதனால் அந்த இடத்தில் கலவரம் வெடித்தது. அந்த வகையில், அந்த மாணவி படித்து வந்த பள்ளிக்கு தீ வைத்து பலர் போராட்டங்களில் இறங்க அந்த இடமே தீக்காடாக காட்சியளித்தது. இதனால், கனியாமூர் பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது மாணவியின் இறப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு – ரூ.37,336 க்கு விற்பனை!
இந்த நிலையில் போராட்டம் நடைபெற்ற பள்ளியில் படித்து வரும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய ஆலோசனையை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை தொடங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலரை பணியிடம் மாற்றி பள்ளிக்கல்வித்துறை முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதாவது, மாவட்ட கல்வி அலுவலரின் செயல்பாடுகள் திருப்தி இல்லாததால் அவரை பணிமாறுதல் செய்து கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் ராஜு கலவரம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி பள்ளிக்கான மீட்பு நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளராக தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வருவாய்த் துறையினருடன் இணைந்து பணியாற்றுவார் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.