தமிழகத்தில் இம்மாவட்டத்திற்கு ஜூலை 11 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் வரும் ஜூலை 11 ஆம் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற இருப்பதால் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வந்தாலும் கூட கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்து வருகின்றனர். மேலும், கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்றால் அது நெல்லை நெல்லையப்பர் கோவில் தான். ஒவ்வொரு ஆண்டும் நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதாவது, பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து நேத்திக்கடன்களை செலுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் இந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தேரோட்ட திருவிழா நடைபெற இருக்கிறது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!
மேலும், பல ஊர்களில் இருக்கும் பக்தர்கள் வருவதனால் நெல்லை மாவட்டம் முழுக்க உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் திருவிழாவில் கலந்துகொள்ளும் பொது மக்கள் அனைவருமே கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை முடிந்த அளவுக்கு கடைபிடிக்க வேண்டும் எனவும் நெல்லை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.