தமிழகத்தில் அமைச்சுப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
தமிழகத்தில் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்களுக்கு முன் ஊதிய உயர்வு வழங்கப்படுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது குறித்த சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்கள் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற துறைத் தேர்வான சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு பாகம் 1-ல் தேர்ச்சி பெற்றுவர்கள் முன் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதனால் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை கோரி பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்கள் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற துறைத்தேர்வான சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு பாகம் 1 தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. ஆனால் இதற்கு இவர்கள் தேர்வு எழுதியதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் தேர்ச்சி பெற்றதற்கான அரசிதழ் அறிக்கையின் நகல்கள், தேர்ச்சி பெற்ற விவரங்கள், பணிப்பதிவேட்டின் முதல் பக்க நகல் உள்ளிட்ட தகவல்களை உடனடியாக அனுப்ப வேண்டும்.
PG TRB ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் அரசுக்கு பரிசீலினை மேற்கொள்ள தேவைப்படுவதால் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் துரிதமாக செயல்பட்டு வருகிற 9ம் தேதிக்குள் இணை இயக்குநர் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்துடன் மேற்கண்ட விவரங்கள் தவிர்த்து கூடுதல் விவரங்கள் அனுப்பினால் அந்த விவரங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்று கொள்ளப்படமாட்டாது என்றும் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்