4 ஆண்டுகளுக்கு பிறகு அக்னிபாத் வீரர்களுக்கு வேலை – தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு!
இந்தியாவில் அக்னிபாத்’ திட்டத்தின் கீழ் 4 வருடங்களுக்கு பிறகு இராணுவ பணியில் இருந்து வரும் வீரர்களுக்கு பல தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பாதுகாப்பு துறை பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
வேலைவாய்ப்பு:
இந்திய ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு முறை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்திற்கு பணிபுரியும் வகையில் அக்னிபாத் எனும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைபவர்கள் 4 ஆண்டுகள் பணி புரிவார்கள். அதன் பின்னர் அவர்களில் 75% பேர் ராணுவத்தில் இருந்து வெளியேறுவர். 25% பேர் மட்டுமே ராணுவ பணியில் தொடர்ந்து இருப்பர். அக்னிபாத் திட்டத்தின் படி 17.5 வயது முதல் 23 வயது வரையிலான வீரர்கள் பணியில் சேரலாம். திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 34,500 இளைஞர்களை பணியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த 4 ஆண்டுகள் முடிந்த பின்னர் 11 முதல் 12 லட்சம் ரூபாயினை சேவா நிதியாக அரசு வழங்கும் என்றும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும், கடைசி, அதாவது 4-வது ஆண்டில் மாதம் ரூ.40,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பல்வேறு தரபினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 4 வருடங்களுக்கு பிறகு ராணுவத்தில் இருந்து வெளியேறும் வீரர்களின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பபட்டு வருகிறது .
இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க TATA முடிவு? சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
இந்த நிலையில் நான்கு ஆண்டுக்குப் பின், இவர்களுக்கு துணை ராணுவம் உட்பட பல துறைகளில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தனியார் நிறுவனங்களும் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முன் வந்துள்ளது. மகேந்திரா குரூப் நிறுவனத்தின் தலைவர் இராணுவப் பணியை முடித்த திறமையான, பயிற்சி பெற்ற அக்னி வீரர்களை பணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பை, மகிந்த்ரா குழுமம் வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார். ‘எதிர்காலத்தில் தொழில் துறையில் அக்னி வீரர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று பயோகான் லிட்., நிறுவன தலைவர் கூறியுள்ளார்.