அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.27 கடைசி நாள்!

0
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க டிச.27 கடைசி நாள்!
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க டிச.27 கடைசி நாள்!
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.27 கடைசி நாள்!

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பிக்க தற்போது அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதற்கு வருகிற 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

காப்பீடு முகவர்:

கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தற்போது பல்வேறு அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான வயது வரம்பு 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தோ்வுகளில் தோ்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்

தமிழக அரசு பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி – 3 நாட்கள் விடுமுறை!

இதற்கு வேலைவாய்ப்பற்ற அல்லது சுய தொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி, மகிளா மண்டலப் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா்கள், சுய உதவிக் குழுக்களில் செயல்படுவோர், கிராமத் தலைவர், கிராம சபை உறுப்பினர்கள் போன்ற அனைவரும் விண்ணப்பிக்க முடியும். அத்துடன் நேர்காணல் மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதையடுத்து மாத சம்பளமாக பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் தொகையை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் ரூ.5000 காப்பீட்டுத் தொகையை தேசிய சேமிப்புப் பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அருகே உள்ள அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? சுகாதாரத் துறை செயலாளர் அவசர கடிதம்!

அதன் பின் ஏஜென்சி காலம் முடியும் பொழுது இந்த காப்பீட்டு தொகை வட்டியுடன் திருப்பி வழங்கப்படும். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘திவ்யா சந்திரன், முதுநிலை அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி – 628501’ என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக வருகிற 27 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற தலைமை அஞ்சலகங்களான கோவில்பட்டி – 04632-220368, சங்கரன்கோவில் – 04636-222313, தென்காசி – 04633-222329 போன்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!