தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? சுகாதாரத் துறை செயலாளர் அவசர கடிதம்!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? சுகாதாரத் துறை செயலாளர் அவசர கடிதம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? சுகாதாரத் துறை செயலாளர் அவசர கடிதம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? சுகாதாரத் துறை செயலாளர் அவசர கடிதம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகை மாறுபாடு ஆன ஓமைக்ரான் வகை தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு:

தமிழகத்தில் சமீபத்தில் தான் கொரோனா 2ம் அலை பரவல் கட்டுக்குள் வந்தது. முதல் அலையின் தாக்கத்தை விட 2ம் அலையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் அதிக அளவில் இருந்தது. இதனால் கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டது. கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் தான் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. கல்லூரிகள், பள்ளிகள் சுழற்சி முறையில் செயல்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸின் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்று பரவ தொடங்கி தற்போது ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல நாடுகளிலும் பரவி வருகிறது.

சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

இந்தியாவிலும் ஓமைக்ரான் தொற்று பரவல் மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டவர்களின் மூலம் பரவ தொடங்கி விட்டது. இதனால் இந்தியாவில் மீண்டும் அச்சம் அதிகரித்துள்ளது. காரணம் ஓமைக்ரான் வைரசானது கொரோனா தொற்றை விட 10 மடங்கு அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, குஜராத் மற்றும் தமிழகத்திலும் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

ஓமைக்ரான் பரவல் சமீபத்திய அறிக்கையின் படி நாட்டில் 116 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழ்கத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கும் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென அவசர கடிதம் அனுப்பியுள்ளார். ஓமைக்ரான் தொற்று அதிக அளவில் பரவி வருவதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரிப்பது போன்றவற்றை கண்காணிக்கவும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஓமைக்ரான் பரவல் அதிகரித்தால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!