‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை! வைரலாகும் பதிவு!
ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யன் இருவருக்கும் திருமணமான ஒரு மாதத்திலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்திருப்பதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஷபானா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
நடிகை ஷபானா
தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமாக இருந்து வரும் ஒரு முக்கிய தொடரான ‘செம்பருத்தி’ ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ‘செம்பருத்தி’ சீரியல் கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை கடந்திருக்கிறது. இந்த சீரியலில் பார்வதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் பேரன்பிற்கு பாத்திரமாக மாறி இருப்பவர் நடிகை ஷபானா. கேரளா மாநிலத்தை சொந்த ஊராக கொண்ட நடிகை ஷபானா தமிழில் ‘செம்பருத்தி’ என்ற சீரியல் மூலம் தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
அப்படி அறிமுகமான முதல் சீரியலிலேயே எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் சமீபத்தில் தனது காதலரும், சீரியல் நடிகருமான ஆர்யன் என்பவரை கரம் பிடித்தார். இவர்கள் இருவருக்கும் திடீரென நடைபெற்ற இந்த திருமணம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் இருவேறு மதத்தை சேர்ந்த இவர்கள் இருவரது திருமணத்தை குடும்பத்தார் அங்கீகரிக்கவில்லை என்றும், நடிகர் ஆர்யனுக்கு அவரது குடும்பத்தார் வேறு ஒரு பெண்ணை தேடி இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்தது.
அதே போல நடிகர் ஆர்யனை விட்டு ஷபானா விலக வேண்டும் என்று ஆர்யனின் குடும்பத்தார் சொன்னதாகவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி வந்தது. அதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், இருவரும் பிரிய இருப்பதாகவும் கூட வதந்திகள் பவெளியானது. ஆனால் இந்த தகவல்கள் குறித்து நடிகர் ஆர்யன் மற்றும் நடிகை ஷபானா தரப்பில் இருந்து எவ்வித விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை.
விஜய் டிவி சீரியல் நடிகை ரக்ஷிதாவுக்கு ஏற்பட்ட சோகம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் நடிகை ஷபானா சமீபத்தில் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு ஒன்று இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்திருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஷபானா அழகாக வெட்கப்படுவது போல இருக்கும் புகைப்படம் ஒன்றை ‘ஒரு சிறு புன்னகை, கொஞ்சம் சந்தோஷம், ஒரு சிறிய நிலவு, கனவுகளின் ஓலைகளுடன் ஒரு வீட்டை உருவாக்குவோம்’ என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட அவரது ரசிகர்கள் ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகி இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர்.