சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. வெகு நாட்கள்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் கடந்த பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள் இதுவரை காணாத நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்பினர். தொடர்ந்து மக்கள் தங்கத்திலேயே முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள், அலுவலகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனால் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
மற்ற நாடுகளில் தங்கள் என்பது வெறும் முதலீடாகவே கருதப்பட்டது. ஆனால் இந்தியாவில் தங்க அணிகலன்கள் அணிவது என்பது ஒரு கலாசார வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து அதிகரித்த தங்க விலையால் திருமணத்திற்கு நகை வாங்குவோர் சிரமப்பட்டனர். கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகை விலை மென்மேலும் அதிகரித்தது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் எப்போது நகை விலை குறையும் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வாரத்தின் 2வது நாளாக தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.
டிச.25க்கு முன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு முக்கிய ஆலோசனை! ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. அதன் படி ஒரு சவரன் ரூ.36,432-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து, ரூ.4,554 க்கு விற்பனையாகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.65.20-க்கு விற்பனையாகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வரப்போகும் நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.